இப்படி ஒரு முறை தக்காளி குருமா செய்து பாருங்கள்….!

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு சுவையில் சாப்பாடு செய்வார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். இன்று வித்தியாசமான முறையில் ஆட்டுக்கால் பாயா வாசனையுடன் எப்படி தக்காளி குருமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த தக்காளி குருமா செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் போதும். அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை தோசை, பூரி, இட்லி, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். வாருங்கள் எப்படி தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்த்
- முந்திரி பருப்பு
- பொட்டுக்கடலை
- பச்சை மிளகாய்
- மிளகு
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- வெங்காயம்
- தக்காளி
- கிராம்பு
- பட்டை
- ஏலக்காய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் தக்காளி குருமாவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
விழுது : முதலில் மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தேங்காய், முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதில் மிளகு மற்றும் பச்சை நகை தேவையான அளவு நன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த குருமாவில் காரத்திற்க்காக வேறு எதுவும் சேர்க்க போவதில்லை.
தாளிப்பு : குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கிராம்பு, மிளகு, ஏலக்காய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பாயா : அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும்.
அவ்வளவு தான் அட்டகாசமான பாயா தயார். சுவையிலும், மனதிலும் ஆட்டுக்கால் பாயா போல இருக்கும். ஒரு முறை நிச்சயம் செய்து பாருங்கள். உங்களுக்கே மிகவும் பிடிக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025