இந்தியாவிற்கு ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துவிட்டதாக தெரிகிறது. காரணம் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 3.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர்மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலைமை சிறிது காலம் தொடர்ந்தால், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமை அதிகாரித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பல நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்கு நிதி உதவி அறிவித்துள்ளன. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் போன்றவை வழங்கி வருகின்றனர். கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான உபகரணங்களை அறிவித்துள்ளன.
இந்த பட்டியலில் மைக்ரோ பிளாக்கிங் நிறுவனமான ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ. 110 கோடிக்கு மேல் இருக்கும். இந்த தொகை இந்தியா கொரோனா நெருக்கடியிலிருந்து மீள உதவும் என்று அவர் கூறினார்.
இந்த தொகையை கேர்(CARE) 10 மில்லியன் டாலரையும், எய்டு இந்தியா (Aid India) சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா(Sewa International USA) ஆகிய நிறுவனங்களுக்கு தலா 2.5 மில்லியன் டாலர் நன்கொடையாக நிறுவனங்களுக்கு வழங்கியதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…