சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல்.
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், இவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அவர் காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியின போராளி ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. நீண்ட கால விசாரணைக் காவலில் அடைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மேலும், உரிய சட்ட அடிப்படை இன்றி சிறையில் உள்ள கைதிகளை அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேரை விடுவிக்க இந்திய அரசிடம் ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…