மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. மலையாள திரையுலகை பொறுத்தவரையில், நடிகர் மோகன்லால் மம்முட்டி ஆகியோருக்கு தான் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தொழிலதிபரான லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசப் அலி செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த கோல்டன் விசாவை, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை தலைவர் முகமது அலி அல் ஷோறாப் அல் ஹம்மாதி-யிடம் இருந்து நடிகர் மோகன்லால் மட்டும் மற்றும் மம்முட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் மோகன்லால் கூறுகையில், இதற்காக முழு முயற்சி எடுத்த யூசப் அலிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அதனுடன் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் மம்முட்டி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் அரசு வழங்கிய கோல்டன் விசாவை சந்தோசமாக பெற்றுக்கொண்டோம். இது கேரள மக்கள் எங்களுக்கு அளித்த மிகப் பெரிய பரிசாக கருதுகிறோம். நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால், எங்களால் இதை அடைந்திருக்க முடியாது. இதை எங்களுக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…