சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது.கொரோனாவால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 7,993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார்.
இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்பை காரணமாக பாகிஸ்தான் திணறி வருகிறது.இதன் காரணமாக ஏற்றுமதி துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், காகிதம், சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றிக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு , அமெரிக்கா நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. 84 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.64 கோடியே 24 லட்சம்) கொடுப்பதாக அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…