ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 60,000 பேர் தடுப்பூசி சோதனைகளுக்கு முயற்சிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes for Health ) தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பரிசோதிக்கும் உலகின் பத்தாவது மற்றும் அமெரிக்காவின் நான்காவது நிறுவனம் ஆகும். தடுப்பூசியை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 2021 க்குள் மருந்து அவசர ஒப்புதலுக்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் கோர்ஸ்கி கூறுகையில், “கொரோனா தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த நோயை முடிவுக்கு கொண்டுவருவதே எங்கள் ஒரே குறிக்கோள். எங்கள் நிறுவனம் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…