டிரம்ப் மற்றும் பைடன் இடையே மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் விவாதம் நடைபெற்றது.ஆனால் அதிபர் டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே முதல் விவாதம் நடைபெற்ற பின்னர் அதிபர் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொளி மூலமாக 2-வது விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்காக காணொளி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என டிரம்ப் அறிவித்தார். ஆகவே இரண்டாவது விவாதம் கடந்த 15- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி டென்னெஸ்சில் (Tennessee) உள்ள பெல்மொண்ட் பல்கலைக்கழகத்தில் (Belmont University) நடைபெறுகிறது.இந்த விவாதத்தை என்.பி.சி செய்தியாளர் கிறிஸ்டீன் வெல்கெர் (Kristen Welker) தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு 90 நிமிடங்கள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…