அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் – டிரம்ப் அறிவிப்பு

Default Image

அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பாலா நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாயக்கத்தால், இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்  முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை அமெரிக்காவில், 1,620,902 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில், 1,418 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸால் நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மேலும், அடுத்த பதிவில், திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war