உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸை உலக முழுவதும் பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கிழக்கு மாசசூசெட்ஸில் உள்ள பெரிய பாஸ்டனில் பல நகரங்களால் நடத்தப்படும் போஸ்டன் மாரத்தான் ஏப்ரல் 20ம் தேதி போட்டியை நடத்த அந்நாடு முடிவு செய்திருந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இப்போட்டியை செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த போட்டி எப்போதும் ஏப்ரல் 3வது திங்கட்கிழமை தேசபக்தர்கள் தினத்தில் நடைபெறும். 1897ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு, 1896 கோடைகால ஒலிம்பிக்கில் முதல் மராத்தான் போட்டியின் வெற்றியால் ஈர்க்கப்பட்டது. இந்த நிலையில் 124வது ஆண்டுக்கான போஸ்டன் மாரத்தான் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என போட்டி நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…