அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய அதிகாரியான சுக்பீர் டூர் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்ந்தார். தற்போது இந்த சீக்கிய அதிகாரிக்கு டர்பன் அணிய அமெரிக்க கடற்படை அனுமதி அளித்துள்ளது. இவர் அவரது மத வழக்கப்படி, டர்பன் அணிந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க கடற்படை, போர் முனையில் சீருடை வேறுபாடு மற்றும் கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை இது பாதித்து விடும் என்பதால், தோல்விக்கு வழிவகை செய்யும் என்று இதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
பின்னர், சுக்பீர் கேப்டன் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை அடுத்து மீண்டும் அவர் டர்பன் அணிவது குறித்து விண்ணப்பித்துள்ளார். இதில் ஒரு சில நிபந்தனைகளோடு அமெரிக்க கடற்படை இதனை அனுமதித்துள்ளது. இதனால் முதன் முதலில் டர்பன் அணிந்த பெருமையை சுக்பீர் பெற்றுள்ளார். இந்த அனுமதி வழக்கமான பணியின் போது மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. போர் முனையில் செயல்படும்போது அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…