அமெரிக்கா:அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பொது வீட்டுவசதி ஆணையத்திற்குச் சொந்தமான நகரின் ஃபேர்மவுண்ட் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நீண்ட நேரம் கடுமையாக போராடினர்.அதன்பின்னர்,தீ அணைக்கப்பட்டது.ஆனால், இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும்,தீ விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தீயணைக்கும் கருவிகள் வேலை செய்யாமல் போனதே,உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…