தடுப்பூசி போட்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய வேண்டாம் – தென்கொரியா அரசு!

Published by
Rebekal

தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஜூலை மாதம் முதல் மாஸ்க் அணிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் உலகின் பல நாடுகளில் இன்னும் அமலில் உள்ள நிலையில், தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தற்பொழுது சில நாடுகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கான ஊரடங்கு தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தென் கொரியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 700  அதிகமானோர் அங்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அங்கு 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஜூலை மாதம் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. 2 டோஸ் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டால் கூட மாஸ்க் அணிய தேவையில்லை என தெரிவித்துள்ளதுடன், ஜூன் மாதம் முதல் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் கூட்டமாக கூட அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 5.2 கோடி மக்கள்தொகை காணப்படும் நிலையில் அங்கு வெறும் 7.7 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென் கொரியா திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் தான் மக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

39 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

1 hour ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

2 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

3 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

3 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

3 hours ago