ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிகவும் மும்முரமாக களம் இறங்கியது. அந்த வகையில் தற்போது சில தடுப்பூசிகளை உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற ஜேன் மலிஸியாக் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதல் ஆஸ்திரேலிய நபராவார்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார மந்திரி அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக, அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…