இரண்டாவது முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்.!

Published by
பால முருகன்

வாணிபோஜன் அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக உருவாகும் படத்தில் பைபவ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார்.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் ஜீ5 என்ற ஓடிடி தளத்திற்காக உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார் . ஏற்கனவே ஜீ5 தளத்திற்காக உருவாகிய லாக்கப் எனும் படத்தில் வைபவ் அவர்களுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போதும் ஜீ5 தளத்திற்காக உருவாகும் படத்தில் நடிகர் வைபவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இந்த படத்தினை அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.பிரேம்ஜி இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Published by
பால முருகன்
Tags: #VaniBhojan

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

15 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

16 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

16 hours ago