“எங்களின் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா”- சீன அரசு அதிரடி உத்தரவு!

Published by
Surya

சீனாவில் தயாரிக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்துகளை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் குறையதொடங்கிய நிலையில், தற்பொழுது மீண்டும் பரவத்தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இதில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்துகளை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள், சீனா வர அனுமதி மறுக்கப்பட்டது. இதன்காரணமாக சீனாவில் படித்துவந்த 23-ஆயிரம் இந்திய மாணவர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்கள். தற்பொழுது இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களால் தங்களின் படிப்புகளை ஆன்லைனில் கூட தொடர முடியவில்லை. இதனால் மாணவர்கள் உட்பட வெளிநாட்டு பயணிகளை மீண்டும் அனுமதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்றும், இதனால் மாணவர்கள் உட்பட சீனா வரும் அனைவரும் கண்டிப்பாக சீன கொரோனா தடுப்பூசியை  போட்டுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்றும், இதர நாட்டின் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதுவரை சீன தடுப்பூசியைப் போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு…

10 minutes ago

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!

சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

32 minutes ago

தமிழகத்தில் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…

50 minutes ago

நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…

1 hour ago

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

13 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

14 hours ago