தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது.
பிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் கானை வைத்து தாபங் 3 படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் டிசம்பர் 20இல் வெளியாக உள்ளது. அடுத்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை சல்மான் கானை வைத்து பிரபு தேவா இயக்க உள்ளார். ‘
இந்த படம் வாண்ட்டட் படத்தின் 2ஆம் பாகம் என கூறப்படுகிறது. இப்படம் தி அவுட்லாஸ் எனும் கொரிய படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…