நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புகிறீர்களா? டிவி பார்ப்பதே வேலையாக இருப்பதுபோல ஒரு வேலை வேண்டுமா? ஒரு தொழில்நுட்ப நிறுவனம், டிவியை பார்த்து ரசிக்கும் வேலை ஆட்களை தேடுகிறது. அந்தவேளைக்கு நீங்கள் நல்ல எழுதும் திறன் கொண்ட ஆங்கிலப் பேச்சாளராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த வேலையே, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை” என்று தன்னை தானே விவரிக்கும் ஆன்பய் (onbuy) என்ற நிறுவனம் விளங்குகிறது. நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு டிவி பார்த்தல் £ 35 (இந்திய மதிப்பில் ரூ. 3,281), வாரத்திற்கு குறைந்தபட்சம் 20 மணிநேரம் பார்த்தல், அதாவது நீங்கள் ஒவ்வொரு வாரமும் 20 மணிநேரம் பார்த்தல் £ 700 (இந்திய மதிப்பில் ரூ .65,600) சம்பாதிக்கலாம் என தெரிவித்தது.
டி.வி.க்கள், கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் வீட்டு சினிமா அமைப்புகள் உள்ளிட்ட பல மின்னணு தயாரிப்புகள் குறித்த கருத்துக்களை வழங்கக்கூடிய “தொழில்நுட்ப சோதனையாளரை” இந்த நிறுவனம் அழைக்கிறது.
இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொரு மாதமும் டிவி உள்ளிட்ட பொருட்கள் வரும். அந்த பொருட்களின் வடிவமைப்பு, செயல்திறன், ஆயுள், ஒலி, காட்சி, செயல்பாடு மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றை நீங்கள் சோதிக்க வேண்டும். அதனை சோதித்த பின்னர், அந்தப்பொருட்களில் உள்ள குறை, நிறைகளை 200 வார்த்தைகள் மதிக்கத்தக்க ஒரு பேப்பரில் எழுத வேண்டும்.
அவ்வாறு நீங்கள் செய்தாலே போதும். ஒரு வாரத்தில் நீங்கள் 65,600 வரை சம்பாதிக்கலாம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் காஸ் பாட்டன் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தகவல்களையும், தடையற்ற அனுபவத்தையும் வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
எனவே தொழில்நுட்ப வல்லுநரிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதன் மூலம், தயாரிப்புகளை அதன் வேகத்தின் மூலம் உண்மையிலேயே வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து ஆழ்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என கூறினார்.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…