கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமேரிக்கா மாறி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,217 கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில்,
கொரோனா வைரசால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் மீண்டும் முன்னேற செய்யவேண்டும்.அது எந்த வகையிலும் மக்களின் பாதுகாப்பை பாதிக்க கூடியதாக இருக்காது.
கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். சோதனைக்கான கால அவகாசம் மிக அவசியம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர்கள் ெகாரோனா மட்டுமின்றி எல்லா வைரசையும் அழித்துவிடும் என றிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் வில்லியம் பிரையன் தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் பேசுகையில், ‘புறஊதா கதிர்களை கொரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தி கொரோனாவை அளிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யவேண்டும்’ என்று ட்ரம்ப் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு கொண்டார்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…