என்ன ஒரு ஆச்சரியம்…! பிறக்கும் போதே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை…!

Published by
லீனா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளல்  வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் 36 வாரங்கள், மூன்று நாட்கள் கர்ப்பிணியாக இருந்தபோது மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட மூன்று வாரங்களில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை நல்ல உடல் எடையிலும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. மேலும் இந்த குழந்தையை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது, குழந்தையின் உடலில் உள்ள ரத்தத்தில், இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாட் ரூட்னிக், பால் கில்பர்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில் கூறியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி முழுமையாக இருப்பது இதுதான் முதல் முறையாகும். இந்த குழந்தை பிறந்து 28 நாட்களுக்குப் பின் அப்பெண்ணுக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது.

இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தை மற்றும் கருமுட்டை ஆகியவற்றில் மருத்துவர்கள் எதிர்பார்த்த அளவைவிட கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு மட்டுமே முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டது என்றும், தடுப்பூசியை கற்பகாலத்தில் செலுத்துவதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடலில் இயல்பாகவே கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Published by
லீனா

Recent Posts

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

58 minutes ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

1 hour ago

நாயகனை மிஞ்சியதா “தக் லைஃப்”! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…

2 hours ago

ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…

3 hours ago

தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…மன வேதனையில் விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…

5 hours ago

முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…

6 hours ago