“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!
ஸ்ரேயாஸ் ஐயருக்கு மன்னிப்பே கிடையாது என யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது மட்டுமின்றி அணியையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டுபோனார். இதுவரை ஒரு முறை மட்டுமே அதாவது 2015-ஆம் ஆண்டு மட்டுமே பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு 9 வருடங்களாக பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் இருந்த நிலையில், இந்த சீசன் தான் பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக விளையாடினார். இந்த சீசனுக்கு முன்பு அவர் கொல்கத்தா அணியை சிறப்பாக விளையாட வைத்து கோப்பையும் வாங்கிக்கொடுத்தார். அந்த சீசன் என்ன செய்தாரோ அதேதான் இந்த முறை பஞ்சாப் அணிக்காக செய்தார். இருப்பினும், இறுதிபோட்டியில் பெங்களூரை வீழ்த்தி வெற்றிபெற முடியவில்லை.
எனவே, பஞ்சாப் அணி கோப்பையை வெல்ல முடியவில்லை என வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் மீதி எதிர்மறையான விமர்சனங்களும் எழ தொடங்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் ஷ்ரேயாஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய விதத்தை கடுமையாக சாடி விமர்சித்து பேசியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” அனைவரும் சொல்லும்படி ஸ்ரேயாஸ் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது சரி தான். ஆனால், என்னுடைய கேள்விகள் என்னவென்றால் இறுதிப்போட்டியில் ஷ்ரேயாஸ் என்ன செய்தார் என்பது தான். இறுதிப்போட்டியில் அவர் அந்த மாதிரி ஒரு ஷார்ட் ஆடி ஆட்டமிழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தவறான முறையில் ஆட்டமிழந்து கோப்பையை அவர் தவறவிட்டுவிட்டார் என்று தான் நிச்சயமாக சொல்வேன். பஞ்சாப் அணியின் தோல்விக்கு பின்னால் இருக்கும் குற்றவாளி என்றாலும் கேப்டன் தான். அவர் ஆடிய அந்த ஷார்ட் கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை கூட கொடுக்கலாம். என்னை பொறுத்தவரை அவருக்கு மன்னிப்பே கிடையாது. நேர்மையாகச் சொன்னால், நான் அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்” எனவும் யோகராஜ் சிங் காட்டத்துடன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025