விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கிய திரைப்படம் துப்பறிவாளன் 2.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதும் ,அது முடிவடைந்த பின் படத்தில் வைத்த பொருட் செலவு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாக்குவாதம் ஏற்பட மிஷ்கின் துப்பறிவாளன் -2 படத்திலிருந்து விலகினார்.
அதன் பின் அந்த படத்தினை விஷாலே இயக்குவதாக கூறப்பட்டது.இதில் அஷ்யா, ரகுமான், கவுதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.கடந்தாண்டு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு எதுவும் இதுவரை நடைபெறவில்லை.நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட படப்பிடிப்பானது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த.அதன் பின் விஷால் சக்ரா ,எனிமி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தியதால் இந்த படத்தினை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.ஆம் விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் வைத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அங்கு லாக்டவுனில் தளர்வுகள் அறிவித்ததும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விஷால் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…