வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய வசதி…!என்னனு தெரியுமா?..!

Published by
Edison

வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,இனி பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் பேச முடியும்.குறைந்த பட்சம் 5 பேர் வரை ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ அல்லது ஆடியோ கால் மூலம் பேசமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் ஒரு அழைப்பு தகவல் திரையையும் கொண்டு வருகிறது.அதாவது அழைப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க  அனுமதிக்கிறது.

புதிய அம்சம்:

இதற்கு முன்னர்,குரூப் அழைப்பு அறிவிப்பைத் தவறவிட்ட பயனர்கள் அழைப்பாளரை மீண்டும் சேர்க்குமாறு கேட்க வேண்டும்.அது மிகவும் சிரமமாக இருந்தது.ஏனெனில்,தாமதமாக இணைவதால் அழைப்பில் மற்றவர்கள் முன்னதாக பேசிய உரையாடலை பெரும்பாலும் தவறவிடும்படி இருந்தது.

ஆனால்,இந்த புதிய அம்சம் பயனர்கள் குரூப் அழைப்பில் எப்போது சேர விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடமே தீர்மானிக்க விட்டுவிடுகிறது. மேலும்,பயனர்கள் ஏற்கனவே இருக்கும் அழைப்பிலிருந்து விலகி,பின்னர் மீண்டும் சேர அனுமதிக்கிறது.

இத்தகைய புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பில் ஐ-போன்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

IMO, Google Duo போன்ற செயலிகளில் குரூப் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்வது போன்று இனி வாட்ஸ் அப்பிலும் செய்ய முடியும். அதன்படி,அழைப்பின் போது “Tap to join” மூலம் அதில் இணைந்து கொள்ளலாம்.வீடியோ அழைப்பை தவிர்க்க ‘ignore’ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மார்க் ஜுகர்பெர்க்:

மேலும்,இது குறித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கூறுகையில் :”வாட்ஸ்அப்பில் குரூப் அழைப்புகள் வசதி இன்று தொடங்குகிறது. இப்போது நீங்கள் குரூப் அழைப்பில் சேர்க்கப்பட்டால் அல்லது அதை தவறவிட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
Edison

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago