வாட்ஸ்-அப்பின் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் முழுமையாகப் பயன்படுத்தத் முடியாது..!

Published by
Edison

வாட்ஸ்-அப்பின் புதிய பிரைவசி கொள்கையை ஏற்காவிட்டால் பயன்பாட்டின் சேவைகள் குறையும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து,பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்பு, மே 15 ஆம் தேதிக்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ்-அப் கணக்கு நீக்கப்படாது என்றும்,ஆனால்  வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில்,புதிய கொள்கையை நினைவுபடுத்தும் விதமாக,பல நாட்களுக்குப பிறகு,வாட்ஸ்-அப் தற்போது கணக்கு புதுப்பிப்பு பற்றிய தகவலை அறிவித்துள்ளது.அதில்,’புதிய கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படாது.ஆனால்,வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது,புதிய கொள்கையை ஏற்காத பயனாளர்கள் வாட்ஸ்-அப் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.அதற்குப்பதிலாக,வாட்ஸ்-அப்பில் இன்கம்மிங் கால் மற்றும் வீடியோ கால்களில் பேச முடியும்.மேலும்,நோட்டிபிகேஷன் எனேபிள்(Enable) செய்திருந்தால் வரும் மெசேஜ்களை படிக்க முடியும்.

அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் மெசேஜ் அனுப்புதல் மற்றும் இன்கம்மிங் கால் வசதிகள் முழுமையாக நிறுத்தப்படும்.எனினும், அனைத்து பயனாளர்களுக்கும் ஒரே நேரத்தில் இது நடக்காது என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago