வைரல் வீடியோ:நிலவு வரும்போது,சிக்னல் என நினைத்து மெதுவாக செல்லும் டெஸ்லா கார்…!

Published by
Edison

நிலவு வரும்போது அதனை சிக்னல் என நினைத்து டெஸ்லா கார் மெதுவாக செல்வதாக கூறி காரின் உரிமையாளர்,வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,தயாரிப்புகளில் ஒன்றான டெஸ்லா கார்கள் பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமாகிவிட்டன. அவற்றில் ஒன்று தன்னியக்க பைலட் பயன்பாடு முறையாகும்,அதாவது,இது முழுவதும் தானாக இயங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.இதனால்,இந்த கார் பலரால் மிகவும் விரும்பத்தக்கதாக அமைகிறது.

இந்நிலையில்,டெஸ்லா காரில் உள்ள ஒரு சிக்கல் குறித்து ஜோர்தான் நெல்சன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது:

“காரின் தானாக இயங்கும் அமைப்பில்,நிலவினால் ஏற்படும் சிக்கல் குறித்து,உங்கள் குழு பார்க்க வேண்டும்.ஏனெனில்,எதிரே நிலவு வரும்போதெல்லாம்,அதனை ஒரு மஞ்சள் போக்குவரத்து ஒளி என்று கருதி,கார் மெதுவாக இயங்குகிறது”,என்று தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதாவது,நிலவு வரும்போதெல்லாம்,திரையில் ஒரு போக்குவரத்து சிக்னலைக் காட்டியது, அதில் மஞ்சள் ஒளி பிரகாசித்தது. இதன் காரணமாக,காரின் முன்னால் எதுவும் இல்லாத இடத்திலும் கார் மெதுவாகச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள்,தங்களது பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Edison
Tags: Tesla Car

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago