ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஏனெனில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தினை விரைவில் முடித்து கொடுத்த பின்னரே அரசியலில் களமிறங்குவேன் என்று கூறியிருந்தார்.அவர் அரசியல் வருகை குறித்து கூறிய போது 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் . அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு படத்தினை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…