கொரோனா மக்கள் மத்தியில் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான தெரிவிக்க உலக சுகாதார அமைப்பு உலக விஞ்ஞானிகள் அடங்கிய குழு வலியுறுத்தியதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா காற்று வழியாக வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக் கொண்டது.
உலக சுகாதார அமைப்புன் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா நேற்று செய்தியாளர் கூட்டத்தில், WHO தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள், கொரோனா வைரஸ் எவ்வாறு காற்றில் பரவுகிறது, எப்படி என்பது குறித்து பல வாரங்களாக நாங்கள் ஏராளமான (அறிவியல்) குழுக்களுடன் ஈடுபட்டுள்ளோம் என மரியா வான் கெர்கோவ் கூறினார்.
இந்நிலையில், 32 நாடுகளை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்து, WHO கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடும் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவும் 19 முறைகளில் ஒன்றாக காற்று மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என கூறினார்.
எதிர்காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாங்கள் ஒரு நாளைக்கு 100,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை கண்டோம் என்று டாக்டர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆனால், இன்று நாங்கள் ஒரு நாளைக்கு 200,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை காண்கிறோம் என கூறினார். இறப்புகளின் எண்ணிக்கை இப்போதைக்கு நிலையானதாகத் தோன்றியது என்று ரியான் கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…