அனைவரும் ஆபத்தில் இருக்கிறோம்.! நம்மை நாமேதான் பாதுகாக்க வேண்டும்.! WHO எச்சரிக்கை.!

Published by
மணிகண்டன்

‘ தினமும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை என்பதை நாம் நினைவில் கொண்டு, நம் ஒவ்வொருவரையும் நமே தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் ‘ – WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம். இருக்கிறது. இதனை தடுக்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இதுவரையில், 1,55,17,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இருந்தாலும், 94 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்துகள் :

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி  தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு, கண்டுபிடித்த தகடுப்பூசி பாதுகாப்பானதாக இருப்பதாகவும், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை தருவதாகவும்,  விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.  அந்த தடுப்பு மருந்துகான இறுதி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதே போல, ரஷ்யா தயாரித்து வரும் தடுப்பூசி ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் டெல்லி  எய்ம்ஸில் மனித சோதனை நடைபெற்று வருகிறது.

இது போல் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால், உலக மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

எச்சரிக்கும் WHO :

அண்மையில், டிவிட்டரில் WHO வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாக கீழ்கண்ட கருத்தை பதிவிட்டுள்ளது.

அதில், ” உலகில் பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கோவிட்-19 இன்னும் பரவிவரும் நிலையில், நம் அனைவருக்கும் ஆபத்து உள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்தால், நீங்கள் உங்கள் பாதுகாப்பை தளர்த்தி கொள்வது பேராபத்தாகும்” எனவும்,

” மற்ற யாரேனும், உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது. நம் ஒவ்வொருவரையும் பாத்துக்கவேண்டியது நமது கையில்தான் உள்ளது. ” என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்ததாக WHO அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago