கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் சேதாரமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வனத்தீ அமெரிக்கா முழுவதும் உள்ள 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில் பரவி வருவதாகவும், இதனால் 10,435 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஒட்டு மொத்தமாக 400 கட்டடங்களும் 348 வாகனங்களும் இந்த தீயால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீக்கு காரணமானவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…