மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்வீர்களா.? சுரேஷ் சக்கரவர்த்தியின் அதிரடி பதில் .!

Published by
Ragi

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்வீர்களா என்று கேட்டதற்கு கூப்பிட்டால் கண்டிப்பாக சென்று வச்சு செய்வேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது பலருக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது .

எல்லோருக்கும் கடும் போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கடி தந்திரங்களை பயன்படுத்தியும், கொளுத்தி போட்டும் போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றார் . அவர் வெளியேறியதும் பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது யூடுயூப் சேனலில் ரசிகர்களிடம் லைவ்வில் பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி, நீங்கள் கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வனிதா சென்றதை போன்று உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் பிக்பாஸ் வீட்டினுள் செல்வீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்க , கண்டிப்பாக தன்னை கூப்பிட்டால் பிக்பாஸ் வீட்டினுள் சென்று அனைவரையும் வச்சு செய்வேன் என்று கூறியுள்ளார் . மேலும் நீங்கள் என் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் , எடுப்பார் கைப்பிள்ளையாக‌ மற்ற போட்டியாளர்கள் எல்லாம் இருக்க , இடுப்பில் இருந்து இறங்காத பிள்ளையாக சோம் மட்டும் உளளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் மற்ற போட்டியாளர்களை பயந்து தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டீர்களா என்று ரசிகர் கேட்டதற்கு , அவர்கள் எல்லாம் பல்லு புடுங்கின பாம்புகள் என்றும்,  அவர்களுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் ,  அவர்கள் எல்லோரும் தான் என்னை பார்த்து பயந்தார்கள் என்று கூறியுள்ளார் . மேலும் அவர் தனது யூடுயூப் சேனலில் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம் செய்து ஒளிப்பரப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

31 minutes ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

2 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

4 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

5 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

5 hours ago