பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக் கூடாது எனவும், பெண்களுக்கு அலுவலகத்தில் ஆண்கள் டீ அல்லது காபி பரிமாறுவது போன்ற காட்சிகள் திரையிட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்தப் பெண்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டு தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறுகையில், இத்தகைய சில விதிமுறைகள் காரணமாக தாங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒளிபரப்பு செய்வதிலும் பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும், இதனால் தான் இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கு எதிராக இவ்வாறு ஒடுக்குமுறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, அந்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…