பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பிக்க கூடாது – ஈரான் அரசு!

Published by
Rebekal

பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவது போன்ற காட்சிகளில் பெண்கள் நடிக்கக் கூடாது எனவும், பெண்களுக்கு அலுவலகத்தில் ஆண்கள் டீ அல்லது காபி பரிமாறுவது போன்ற காட்சிகள் திரையிட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்தப் பெண்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டு தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறுகையில், இத்தகைய சில விதிமுறைகள் காரணமாக தாங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒளிபரப்பு செய்வதிலும் பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும், இதனால் தான் இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கு எதிராக இவ்வாறு ஒடுக்குமுறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, அந்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

32 minutes ago

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

1 hour ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

1 hour ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

2 hours ago

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

18 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

18 hours ago