ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ரஷியா சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாஸ்கோவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பிரதிநிதி ஜெனரல் செர்ஜி ஷோயுகு இடையே நடந்த சந்திப்பின் போது இந்தியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டேம் என்று ரஷ்யா தெரிவித்தது.
மேலும், இந்த சந்திப்பில் இந்தியாவில் ஏ.கே .203 என்ற புதிய வகை துப்பாக்கியை தயாரிப்பது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். பின்னர், இந்தியாவில் ஏ.கே.47-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தை இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு சுமார் 770,000 ஏகே-47 203 ரக துப்பாக்கிகள் தேவை அவற்றில், 100,000 இறக்குமதி செய்யப்படும் என்றும் மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ரஷ்யாவின் அரசு சார்ந்த செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…