இங்கிலாந்து ஏற்பாடு செய்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று வரி நடைபெறும் மாநாட்டில் நேற்று முன்தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி இந்தியா, பல சவால்களை கடந்த வரலாற்றை கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் உள்ளது. மேலும், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசிய அந்நாட்டு இளவரசர் சார்லஸ், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை குறித்து பேசினார். அப்போது, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் என கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை மக்கள் பார்க்க வேண்டும். நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் பற்றி நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். தங்களை புதுப்பிக்க முயற்சி செய்யும் போது இந்தியாவின் பண்டைய அறிவை உலகம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரமாகும். இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது.
அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. இந்தியாவில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காக முன்னணியில் பணியாற்றி வரும் இந்திய புலம்பெயர்ந்தோர், இங்கிலாந்து ஆசிய அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களுடன் சமூக நிதியை பயன்படுத்துவதற்கு, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகின்றது என கூறினார்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…