World First Message: ரூ.1 கோடிக்கு ஏலம் போன குறுஞ்செய்தி..!

Published by
murugan

உலகின் முதல் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) 1992 ஆம் ஆண்டு வோடபோன் ஊழியரால் “மெர்ரி கிறிஸ்மஸ்” என்று அனுப்பப்பட்டது. இந்த குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகள் காரணமாக  குறுந்தகவல் சேவையான எஸ்எம்எஸ் கிட்டத்தட்ட பலருக்கும் மறந்துவிட்டது.  ஆனால், உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு 1992 ஆம் ஆண்டு, வோடஃபோனின் பிரிட்டிஷ் ஊழியர் ஒருவரால் அனுப்பப்பட்டது.

அந்த ஊழியரின் பெயர் நீல் பாப்வொர்த். நீல் ஒரு புரோகிராமர் டிசம்பர் 3, 1992-ஆம் ஆண்டு அன்று அவர் தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். இந்த முதல் குறுஞ்செய்தியில் “மெர்ரி கிறிஸ்மஸ்” என்ற 14 எழுத்துக்கள் இருந்தன. நீல் தனது ஆர்பிட்டல் 901 மொபைல் (Orbital 901 Mobile Handset)  கைபேசியில் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அந்த எஸ்எம்எஸ் அனுப்பினார்.

2017ல் ஒருமுறை இதைப் பற்றி பேசிய நீல், 1992ல் இந்த எஸ்எம்எஸ் அனுப்பிய போது இந்த எஸ்எம்எஸ் இவ்வளவு பிரபலமாகும் என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். உலகின் முதல் குறுஞ்செய்தியை மொபைல் கைபேசியில் அனுப்பியதாக அவர் தனது குழந்தைகளிடம் கூறியிருந்தார். 1992ம் ஆண்டு முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. 1995 வரை சராசரியாக 0.4 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு மாதமும் எஸ்எம்எஸ் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்த “மெர்ரி கிறிஸ்மஸ்” குறுஞ்செய்தியின் டிஜிட்டல் நகலை ஏலம் விட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3 -ஆம் தேதி அனுப்ப்பட்ட “மெர்ரி கிறிஸ்மஸ்” என்ற குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைக்கும் வருமானம் UNHCR-UN Refugee Agencyக்கு வழங்கப்படும் என்று வோடபோன் தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

41 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

57 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

5 hours ago