‘Corona To Covid-19’ பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • சீனாவில் கொரோனா வைரசால் 1,113 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் அச்சிறுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (புதன்) காலை வரை 1,113-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 4,740 பேர் இந்த வைரஸில் இருந்து குணமைடைந்து வீடு திருப்பியுள்ளார்கள் என தகவல் வந்துள்ளது. இதனிடையே, 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

'கொரோனா To Covid-19' பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று அர்த்தம் என்பதால், மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட இந்த வைரசுக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டது. இதனால் கொரோனா என்ற பெயரை பயன்படுத்தி வரும் மக்களும், பல நிறுவனங்களும் வைரஸின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதில் குறிப்பாக மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ‘கொரோனா பியர்’  பல பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். எனவே, கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றினால் சுமார் ரூ.100 கோடி தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.

இதுபோன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக சுகாதார நிறுவனம், நேற்று( செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றியுள்ளது. அதற்கு கொவிட்-19 (Covid-19) என்று தற்போது பெயர் சூட்டப்பட்டது. கொரோனா, வைரஸ், டிசீஸ் (disease) – ஆகிய 3 சொற்களில் இருந்து இந்தப் புதிய வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 19 என்பது, வைரஸ் பரவத் தொடங்கிய ஆண்டான 2019-ஐ குறிக்கின்றது. வைரஸின் இந்த புதிய பெயர் எதையும் குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

3 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

4 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

4 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

5 hours ago