உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 41,81,218 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் இந்த கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 41,81,218 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,83,876 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 14,93,490 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 47,024 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை கொரோனா வார்டில் 24,03,852 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 80 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,621 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,64,663 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,76,439 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,19,183 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,560 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,19,070 ஆக உயர்ந்துள்ளது. எனவே, இந்த நாடுகள் தான் உலகிலேயே கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…