#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

Published by
Edison

ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக,காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி ஆணையர் பால் நியாதி கூறுகையில்:”நேற்று இரவு நடந்த விபத்தில் இதுவரை,இறந்தவர்களின் எண்ணிக்கை 35 மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,36 ஜிம்பாப்வே கிறிஸ்தவ தேவாலய (ZCC) உறுப்பினர்களின் உயிரைப் பறித்த பேருந்து விபத்தை தேசிய பேரிடராக ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா அறிவித்தார்.இன்று நள்ளிரவு முதல் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜிம்பாப்வே பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

9 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

9 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

10 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

11 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

12 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

12 hours ago