ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக,காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி ஆணையர் பால் நியாதி கூறுகையில்:”நேற்று இரவு நடந்த விபத்தில் இதுவரை,இறந்தவர்களின் எண்ணிக்கை 35 மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,36 ஜிம்பாப்வே கிறிஸ்தவ தேவாலய (ZCC) உறுப்பினர்களின் உயிரைப் பறித்த பேருந்து விபத்தை தேசிய பேரிடராக ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா அறிவித்தார்.இன்று நள்ளிரவு முதல் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜிம்பாப்வே பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…