வைரல்

பிரதமர் மோடியுடன் செல்ஃபி..வரிசையில் நின்ற அமெரிக்க அரசியல்வாதிகள்..! வைரலாகும் வீடியோ..

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க அரசியல்வாதிகள் வரிசையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு மூன்றுநாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1 மணி நேரம் உரையாற்றினார். அவரது உரையை கேட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் பலரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

பிறகு, பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலரும் வரிசையில் நின்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க காங்கிரஸார் வரிசையில் நிற்பதைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

18 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago