ChennaiRain [Image-IndiaToday]
சென்னையில் ஜூன் மாதத்தில் பெய்த மழை இயல்பை விட 295% அதிகம் என வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் மழை தொடரும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 27 வருடத்திற்கு பிறகு சென்னையில், ஜூன் மாதத்தில் இவ்வாறு அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஜூன் மாதம் பெய்த மழையின் அளவு இயல்பை விட அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்துவந்ததால் அங்கு நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதை அடுத்து திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் தற்போது வரை பெய்த மழை 162.2 மி.மீ என பதிவாகியுள்ளது. வழக்கமாக 41.1 மி.மீ அளவு வரை மழை பெய்யும் நிலையில் தற்போது 162.2மி.மீ பெய்து, இயல்பை விட 295% அதிக மழை பெய்துள்ளதாக வானிலைமையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…