வானிலை

27 வருடத்திற்கு பின் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை – வானிலை ஆய்வாளர்.!

Published by
கெளதம்

27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வழக்கமாக ஜூன் மாதம், சராசரியாக 5-6 செ.மீ மழை பதிவாகும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகியுள்ளதாம்.  அதிகளவாக இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளதாம்.

ஆம்….கடந்த 1996ஆம் ஆண்டு 28 செ.மீ மழைப்பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 21ஆம் தேதிக்கு பின் பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் சென்னை மக்கள் ஸ்தம்பித்துள்ளனர். மேலும், கனமழை எதிரொலியாக இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அவசர எண்:

சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago