Chennai - HeavyRain [File Image]
27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வழக்கமாக ஜூன் மாதம், சராசரியாக 5-6 செ.மீ மழை பதிவாகும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகியுள்ளதாம். அதிகளவாக இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளதாம்.
ஆம்….கடந்த 1996ஆம் ஆண்டு 28 செ.மீ மழைப்பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 21ஆம் தேதிக்கு பின் பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் சென்னை மக்கள் ஸ்தம்பித்துள்ளனர். மேலும், கனமழை எதிரொலியாக இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அவசர எண்:
சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…