BiparjoyCyclone [Image source : file image]
வடகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபார்ஜாய்’ புயல், இன்று மாலை 4 முதல் இரவு 8 மணிக்குள் கரையைக் கடக்கும். இந்நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் ‘பிபார்ஜாய்’ 13ம் தேதி வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில், நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று மாலை, மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிபார்ஜாய் புயல் அச்சுறுத்தல்:
பிபார்ஜாய் புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானை நோக்கி தனது திசையை மாற்றியுள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் வலுவிழந்தாலும், குஜராத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…