bay of bengal cyclone [File Image]
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (24ஆம் தேதி காலை) மாறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிரப் புயலாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு ‘REMAL’ (ரிமல்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 26ஆம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலில் இருப்பவர்கள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…