[Image source : AFP]
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சிகாரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனை தொடர்ந்து இன்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்த மழையானது படிப்படியாக குறையும் எனவும் தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்கள் என மொத்தமாக 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 3 நாட்களில், சென்னைக்கு இன்று கனமழைக்கான வாய்ப்பும், நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அதன்பிறகு மழை குறையும் எனவும் தகவல் வெளியாகயுள்ளது . அதே போல, இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்க கடல் இலங்கையை ஒட்டிய கடற்கரை ஒட்டிய கடற்பகுதிகளில் இன்றும் நாளையும், கடற்பகுதியில் 45- 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…