வானிலை

தென்மேற்கு பருவமழை: எந்தெந்த மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!

Published by
கெளதம்

இந்த ஆண்டு, அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் காரணமாக பருவமழை தொடங்குவதை தாமதப்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

[Image source : Getty Images ]

தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு:

அடுத்த ஐந்து நாட்களில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும். இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல் 29 வரையிலும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும், உத்தரகாண்டில் ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் மாஹேவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கடலோர கர்நாடகாவில் ஜூலை 1 வரை கனமழை பெய்யும். இதனால், பல மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

IMD Rain TN Puducherry [Image- WeatherChannel]

குறையும் மழை அளவு:

தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டை விட 30% மழை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்ட அளவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

பிபர்ஜாய் புயலால், வடமேற்குப் பகுதியைத் தவிர நாடு முழுவதும் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு மழை அளவு குறைவாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

[Image source : AFP]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மழை நிலவரம்:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago