சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘வர்மா’. இப்படத்தை பாலா இயகுகிறார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ -யின் தழுவல். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடனே அடுத்த 10 நிமிடத்தில் விக்ரம் ரசிகர்கள் இதற்க்கு கட்அவுட் வைத்துவிட்டனர். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் படம் அறிவிப்பு வெளிவந்தவுடன் கட்டவுட் வைப்பது இதுவே முதல் முறை. இந்த செயலை செய்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட விக்ரம் […]
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளும் மற்றும் பாராட்டும் தெரிவித்தனர்.
பாலிவுட்டில் முன்னனி நடிகை ஷர்தா கபூர். இவர் ஆஷிக் 2 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையானார். இவரது பலமே இவர் மிகவும் எளிமையாகவும், குழந்தைத்தனமாகவும் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைபடம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், மோசமாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்தானா, இல்லை போட்டோஸாப் செய்து வேறு எவரும் வெளியிட்டுள்ளனரா? என அவரது ரசிகர்கள் […]
கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி பாரத பிரதமர் மோடி ருபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதன் பொருட்டு நடிகர் சிம்பு ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பு ‘தட்றோம் தூக்குறோம்’. இந்த ஆல்பத்தில் Demonstration-ஆல் சாமானிய மக்கள் அடைந்த துன்பத்தை இதில் கூறியிருந்தார். இதனால் தமிழக பாஜகவினர் இவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வைபிருப்பதாக கருதி இவர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு […]
இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.
சியான் விக்ரமை தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக சேது படம் மூலம் அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா. இவர் தற்போது விக்ரமின் மகன் துருவ்-வை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் உலகநாயகனின் மகள் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக். இயக்குனர் பாலா ரீமேக் படத்தை இயக்குவது இதுவே முதல் முறை.
திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனா ப்ரியன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். பொற்காலம் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ப்ரியன் ‘ஆனந்தப் பூங்காற்று, மஜ்னு, வல்லவன், ஆறு,மற்றும் சிங்கம் 1, 2, 3’ போன்ற பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தற்போது சாமி-2 பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.தற்போது இவருடைய மறைவு திரைத்துறையில் இருபவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றுவருகிறது. மேலும் அரசியல்வாதிகளிடம் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. சரி படம் தான் ரிலீஸ் ஆயிடிச்சே இப்போ எதுக்கு மறுபடியும் மெர்சல்? அப்டினா, இது வேற பிரச்சனை, அது மெர்சல் அந்த படம் மாறி இருக்கு இந்த படம் மாறி இருக்குனு நிறைய பேர் சொன்னங்க. இப்போ ஒருத்தர் அது ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் அந்த படத்தின் ரீமேக் உரிமை என்னிடம் தான் உள்ளது. என […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரை தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும். அதற்க்கு காரணம் இவர் திரைக்கு பின் எப்போதும் எளிமையாக இருப்பார். அதை பல இடங்களில் வெளிபடுத்துவார். இவர் அண்மையில் ஒரு உணவுப்பொருள் விளம்பரத்தில் நடித்தார். அதில் கிடைத்த மொத்த வருமானத்தையும் மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக கொடுத்துள்ளார். இதனை பலரும் பாராட்டிவுள்ளனர். தற்போது பிரபல அரசியல் பிரமுகர் ராமதாஸ் பாராட்டிவுள்ளார்.
இன்று விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படத்தின் பாடலான ‘ஆளாபோறான் தமிழன்’ பாடலை சோனி நிறுவனம் இன்று மாலை வெளியிட உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஜூலியும் ஒருவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கபட்டார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற பேரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கெடுத்துகொண்டார் என்பதே உண்மை. மேலும் இவர் வலைதளவாசிகளால் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலியை நடிக்கவைத்துள்ளார். அந்த விளம்பரம் ராமநாதபுரம் […]
அட்லீ க்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்.விஜய்யை வைத்து மெர்சல் படம் இயக்கிய அட்லி மீது நோட்டீஸ் .மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமத்தை வைத்துள்ள பைவ் ஸ்டார் பிலிம்ஸ் புகார்.அட்லீ தனது படங்களில் சத்ரியன், மௌனராகம் போன்ற படங்களின் கதை பின்பற்றி படம் எடுத்ததாக புகார் .
தளபதி விஜய் நடிப்பில் அவரது 50வது திரைப்படமாக வெளிவந்து படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘சுறா’. இப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூ-டியூபில் வெளியானது. இப்படம் இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படம் திடீரென யூ-டியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த போது இப்படத்தை நவம்பர் 10ஆம் தேதியன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறுகளை மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில் “எம்ஜிஆர்” என்ற பெயரில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகும் திரைப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். அவர் இதுவரை தல, தளபதி, சூர்யா, தனுஷ் , கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்நிலைலயில் அண்மையில் ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஒன்றை எடுத்து அனுப்பிவுள்ளார். இந்த அட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று நடந்த வருமானவரிதுறையினரின் சோதனை இன்றும் நடைபெற்றுவருகிறது . சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஓரிரு இடங்களில் சோதனை முடிந்துள்ளது. இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் […]
நடிகர் சூர்யா, விஜய் மற்றும் ரமேஷ் கண்ணா ஒன்றாக நடித்தபடம் ‘ப்ரண்ட்ஸ்’. அப்போது படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியது ‘பிரண்ட்ஸ் பட ஷூட்டிங் நடக்கும்போது அருகில் தெனாலி ஷூட்டிங்கும் நடந்தது அந்த படத்திலும் நான் நடித்தேன். அப்போது ஜோதிகாவிடம் ‘சூர்யா சார் உங்களை கேட்டார்’ என்பேன். அதற்க்கு அவர்களும் சிரித்து கொண்டே ‘நானும் கேட்டேன்-னு சொல்லுங்க’ என்பார். இதனை கூறியவுடன் விஜய், சூர்யா […]
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டயின்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். D.இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படபிடிப்பு 3 மாதம் ஒரே ஷெட்டில் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது.
‘தல’ அஜித், விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த்ததும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ரம்யாவிடம், அஜித் சாரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று கூற, உடனே அவர் ‘அஜித் சாரும், மணிரத்னம் சாரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கபோவதாக கேள்விபட்டேன். அது பற்றி செய்தி எப்போ வரும்’ என கேட்டுவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கூறியது சமூகவளைதலங்களில் வைரல் ஆனது.
வைரமுத்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் பாடல் எழுதியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.இந்நிலையில் அவர் கூறியது இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக அமையும்.தகுதிமிக்கவர் கையிலே இந்த சமுதாயம் இயங்க வேண்டும்.இந்த மையத்தை வைத்து இந்த படம் இயங்குகிறது .அதே போல் அனைத்து துறைகளிலும் தகுதி மிக்கவர்களே […]