தோனியின் க்ளவுஸ்க்கு தடை ..!சர்ச்சையை கிளப்பிய ஐசிசி

Default Image

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியைக் காட்டிலும் இன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக ஒரு செயல் பேசப்பட்டு வந்தது
அது தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை தான் அதில்  இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரை யான “பாலிதான்” இருந்தது. அந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் செய்வது என்று பொருள்
இந்நிலையில் தோனியின் இந்த செயலுக்கு  ட்விட்டரில் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு தடை விதிக்குமாறு பிசிசிஐக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts