மதுரையில் எய்ம்ஸ் அமைக்க இன்னும் இடம் ஒதுக்கவில்லை – மத்திய அரசு தகவல்

Default Image

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இன்னும் இடம் ஒதுக்கப்பட வில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இந்த தகவலானது கிடைக்கப் பெற்றுள்ளது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட நாளாக கோரிக்கை இருந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர். மத்திய அரசு அதற்கான நிதி 251 கோடியை ஒதுக்கியது.
அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts