வாகனம் தராததால் இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

Default Image

மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தராததால் இறந்த ஒருவரின் உடலை குடும்பமே சுமந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம்  காளஹந்தி மாவட்டம் குரும்பூர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை மருத்துவமனையில் நிகிடி மக்ஜி என்பவர் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகதிடம் அவரது உறவினர்கள் வாகனம் கேட்டுள்ளார். இதற்க்கு அந்த நிர்வாகம் வாகனம் தர மறுத்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி உறவினர்கள் அனைவரும் ஒரு கம்பளியில் அவரது உடலை கட்டி கம்பு மூலம் சுமந்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் வரை அவரது உடலை கொண்டு வந்துள்ளார்.இந்த சம்பவமானது ஒடிஷா மட்டுமல்லாது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings