கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 40.5°©, கரூர் பரமத்தியில் 40.0°© வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்று கரூர்பரமத்தி,வேலூர்,ஈரோடு, சேலம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40°© வரை நிலவக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் தமிழகத்தின் வேலூர் 104.9, சேலம் 102.2, மதுரை 100.4, கரூர் 104, ஈரோடு 103.28, தர்மபுரி 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.