இந்த சூப்பை வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் நமது உடலில் உள்ள பல நோய்களை தீர்க்குமாம் !

Default Image

நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே  போதும்.   இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

நேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது

கேரட் -2 கப் நறுக்கியது

உப்பு -தேவையான அளவு

மிளகு – 1 ஸ்பூன்

3 -பல் பூண்டு

2-பிரியாணி இலை

8 -கப் தண்ணீர்

1- வெங்காயம்

செய்முறை :

முதலில் நேவி பீன்ஸை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து பொருள்களையும் போட வேண்டும். இதனுடன் பீன்ஸையும் சேர்க்க வேண்டும்.தன்னை மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். கேரட் மற்றும் பீன்ஸ் வெந்தவுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான நேவி பீன்ஸ் சூப் ரெடி.

பயன்கள் :

இந்த சூப்பை நாம் வாரம் இருமுறை குடித்து வந்தால் நமது உடலில் இருக்கும் சர்க்கரை நோய் கட்டு பாட்டிற்குள் இருக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் எடையை  குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பு :

நேவி பீன்ஸை நாம் ஒரு நாளைக்கு அதிக அளவு எடுத்து கொண்டால் அது வயிற்று வழியை உண்டாகும்,.

சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய் இருப்பவர்கள் இதனை நாம் சாப்பிட கூடாது.

நேவி பீன்ஸை நாம் பச்சையாக சாப்பிடக்கூடாது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies