Breaking : வங்கி முன்பு விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை கோவையில் பரபரப்பு

கோவை சங்ககிரி கொங்குநாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி தற்கொலை
கோவையை சேர்ந்த விவாசி பூபதி கடந்த 2005 ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்கு நண்பர்களுடன் சேர்ந்து 9 கோடி வரை கடன் பெற்றுள்ளார் . பால் பண்ணையில் லாபம் ஈட்ட முடியாததால் கடன் பெற தான் வங்கியில் வைத்த தன்னுடைய நில பத்திரத்தை மீட்கவும் அது குறித்து பேசவும் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார்.
அதற்க்கான பணத்தை செலுத்துவதாகவும் தன்னுடைய பத்திரத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார் வங்கி மேலாளர் கடன் பெற்ற மொத்த தொகையையும் செலுத்தினால் மட்டுமே பத்திரத்தை திரும்ப தர முடியும் என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார் .இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் முற்றியதில் மனமுடைந்த பூபதி வங்கியின் வாசலில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
இந்த தகவல் கேட்டு வந்த போலீசார் பூபதி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .மேலும் அவருடன் சேர்ந்து கடன் பெற்றவர்கள் யார் யார் ஏன் தற்கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025